search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவரம் புதிய பேருந்து நிலையம்"

    கோயம்பேட்டில் இருந்து மாதவரம் பஸ் நிலையத்துக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர். #madhavaramnewbusstand

    சென்னை:

    கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதை குறைக்க மாதவரத்தில் நவீன அடுக்கு மாடி பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    இங்கிருந்து ஆந்திர மாநிலம், திருப்பதி, காளகஸ்தி, நெல்லூர், ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த 468 பஸ்கள் மாதவரம் அடுக்கு மாடி பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ரூ.95 கோடி செலவில் கட்டப்பட்ட மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையம் கடந்த 10-ந்தேதி திறக்கப்பட்டது.

    ஆந்திரா மாநிலத்துக்கு செல்ல கூடிய பயணிகள் மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்துக்கு ஒரே ஒரு மாநகர பஸ் மட்டுமே செல்வதால் அவதியடைந்து உள்ளதாக பயணிகள் கூறுகின்றனர்.

    சென்னை மாநகரில் இருந்து மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு இரண்டு பஸ்கள் மாற வேண்டியது உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக பயணிகள் கூறும் போது, மாதவரத்தில் இருந்து திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னை நகருக்குள் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் வசிப்பவர்கள். கோயம்பேட்டில் இருந்து மாதவரத்துக்கு செல்பவர்கள். ஆனால் கோயம்பேட்டில் இருந்து மாதவரம் புதிய பஸ் நிலையத்துக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து 170ஏ, 121 ஆகிய எண்கள் கொண்ட பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம் அருகே செல்கின்றன.

    114 எண் மாநகர பஸ் மாதவரம் பஸ் நிலையத்துக்கு எதிரே சென்னை- தடா தேசிய நெடுஞ்சாலையில் நிற்கிறது. அதிலிருந்து பயணிகள் இஎஸ்சி சாலையை கடந்து பஸ் நிலையத்துக்குள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது என்றனர்.

    குரோம்பேட்டையை சேர்ந்த பயணி ஒருவர் கூறும் போது, குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்ல புறப்பட்ட போது மாதவரம் பஸ் நிலையத்துக்கு சென்றடைய இரண்டு பஸ்கள் மாறினோம். ஆனால் நேரடியாக மாநகர பஸ்களை இயக்கினால் டிக்கெட் கட்டணம் இதை விட குறைவாக இருக்கும் பயணமும் எளிதாக இருக்கும் என்றார்.

    மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கு சென்னை நகரில் இருந்து செல்ல போதுமான மாநகர பஸ்கள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.

    இது பற்றி போக்குவரத்து கழக வட்டாரங்கள் கூறும் போது, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாதவரம் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் இயக்குவது கடினமான ஒன்று. ஏனென்றால் கோயம்பேட்டில் இருந்து போதுமான பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டுக்கு வந்து நகரில் எந்த பகுதிக்கும் பயணிகள் செல்லலாம் என்றார்.

    மாதவரம் புதிய அடுக்கு மாடி பஸ் நிலையத்தில் இருந்து நாளை முதல் ஆந்திர மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. #madhavaramnewbusstand
    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாதவரத்தில் கீழ்தளம், மேள்தளத்துடன் மாடி பஸ்நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அறிவித்தார்.

    இதையடுத்து பஸ்நிலையம் அமைப்பதற்காக மாதவரம் ரவுண்டானா அருகே 8 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய பஸ்நிலையத்தை அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பு பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது.

    தற்போது மாடி பஸ் நிலைய கட்டிடம், டிரைவர்கள்-கண்டக்டர்கள், பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக விசாலமான அறைகள், ஓட்டல்கள், வணிக வளாகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை போன்றவை நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.

    கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தனித்தனியாக நிறுத்துவதற்கு பார்கிங் வசதி, இலவச குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சமூக விரோதிகள், திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி  மாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்தநிலையில், மாதவரம் மாடி பஸ் நிலையத்தில் இருந்து காளகஸ்தி, திருப்பதி, நெல்லூர், விஜயவாடா என ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு, பாரிமுனை போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

    எனவே பஸ் நிலையத்தின் மேல் தளத்தில் 50 பஸ்களும், கீழ் தளத்தில் 42 வெளியூர் பஸ்களும்(ஆந்திரா மார்க்கம்), 9 மாநகர பஸ்களும் நிறுத்த கூடிய வகையில் பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்நிலையத்துக்கு ‘இண்டர்சிட்டி பஸ் டெரிமினல்’ (நகரத்தின் உள்ளே, வெளியே செல்லும் பஸ் முனையம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இதுவரையில் கோயம் பேடு பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது . நாளை முதல் மாதவரம் புதிய அடுக்கு மாடி பஸ்நிலையத்தில் இருந்து ஆந்திர மாநில பஸ்கள் மற்றும் தமிழக பஸ்கள் ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #madhavaramnewbusstand
    ×